search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறன் மாணவர்கள்"

    • மாணவர்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் செயல்பட்ட வேண்டும்.
    • அனைவரையும் சமத்துவமாக கருதி சகோதர எண்ணத்துடன் மட்டுமே பழகுவேன்.

    தஞ்சாவூர்:

    சமீப காலமாக உயர்கல்வி நிறுவனங்களில் தீண்டாமை கொடுமைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்நிலையில், ஜோதி அறக்கட்டளை சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தஞ்சையில் உள்ள மாற்றுத்திறன் பள்ளி மாணவர்கள் "தீயை விட தீமை, தீண்டாமை" என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் குறைபாடு டையோர் பள்ளி மாணவர்களும், அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவர்களும் சேர்ந்து, 12-ம் வகுப்பு மாணவர் ராமச்சந்திரன் தலைமையில் 'மாணவர்களாகிய நான் யாரையும் எந்த வித பாகுபாட்டுடன் நடத்தாமல் அனைவரையும் சமத்துவமாக கருதி சகோதர எண்ணத்துடன் மட்டுமே பழகுவேன்' என உறுதிமொழி எடுத்துக்கொ ண்டனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில்:-

    மாணவர்கள் அனைவரும் யாரிடமும் தீண்டாமையை கடைபிடி க்காமல் அனைவரிடமும் நல்லிணக்கத்துடன் செயல்பட்டு பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தஞ்சாவூர் பள்ளி மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றனர்.

    நிகழ்ச்சியில் அரசு செவி த்திறன் குறைபாடுடையோர் பள்ளி தலைமையாசிரியர் சக்ரவர்த்தி, அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளி தலைமையாசிரியர் சோபியா மாலதி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில், அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வை யாளர் கல்யாண சுந்தரம் உள்ளி ட்டோர் செய்திருந்தனர்.

    • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கே.என்.பி.புரம் நகராட்சி பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர்பாலசுந்தரி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.

    திருப்பூர் வடக்கு,தெற்கு, பொங்கலூர், பல்லடம், அவினாசி, காங்கேயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள மாற்றுதிறன் மாணவ ர்களுக்கு உபகர ணங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வை யாளர்கள், ஒருங்கிணை ப்பாளர்கள் மற்றும் சிறப்பு பயிற்று னர்கள் செய்திருந்தனர்.  

    • மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, பதிவேடு புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
    • மாணவ, மாணவிகள் கல்வியினை தடையில்லாமல் தொடர்வதையும், முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

    திருப்பூர்,

    நடப்பு கல்வியாண்டில், பள்ளி செல்லா மாற்றுத்திறன் மாணவர்களை குடியிருப்பு வாரியாக சென்று கண்டறிந்து, அவர்களை பள்ளி ஆயத்த பயிற்சி மையங்களில் 3 மாதங்களுக்கு பயிற்சி அளித்து பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் திருப்பூர் உள்பட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தொடர்ந்து30 நாட்கள் பள்ளிக்கு வராமல் இருப்பவர்கள், அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பவர்கள், பள்ளியே செல்லாதவர்கள், 8-ம் வகுப்பு முடித்து இடை நிற்பவர்கள் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவ, மாணவிகளாக கருதப்படுவர்.இம்மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, பதிவேடு புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் முறையாக பள்ளியில் சேர்க்கப்படுவதையும், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் கல்வியினை தடையில்லாமல் தொடர்வதையும், முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×